1250 கிராம் பச்சரிசி மற்றும் 150 கிராம் கருப்பு உளுந்தினை நன்கு கழுவி ஊறவைக்க வேண்டும்.
2ஊறவைத்த பச்சரிசி மற்றும் உளுந்துடன் 1 டேபிள்ஸ்பூன் துவரம்பருப்பு, 1 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு, மற்றும் 1 டேபிள்ஸ்பூன் பாசிப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து 3-4 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
3ஊறவைத்த பருப்பு மற்றும் அரிசி கலவையை மிக்ஸரில் அரைக்க வேண்டும்.
4அரைத்த கலவையுடன் துருவிய தேங்காயை சேர்த்து ஒரு சுற்று மட்டும் மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
5அரைத்த மாவுடன் 1 டேபிள்ஸ்பூன் சீரகப்பொடி, 1 டேபிள்ஸ்பூன் மிளகுப்பொடி, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயப்பொடி சேர்க்க வேண்டும்.
6தோசைக்கல்லில் மாவை அடை போல ஊற்றி, நெய் சேர்த்து இருபுறமும் வேகவிட வேண்டும்.