1கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, தனியா, வேர்க்கடலை, சீரகம் ஆகியவற்றை பேனில் சேர்த்து நன்றாக வறுத்து மிக்ஸி ஜாரில் மாற்றவும்.
2அதே பேனில் சிறிது எண்ணெய் சேர்த்து வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு, தக்காளி, மற்றும் சிறிது புளி சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும்.
3வறுத்த பொருட்கள் மற்றும் வதக்கிய பொருட்கள் அனைத்தும் ஆறியதும், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக அரைத்து மென்மையான விழுதாக எடுக்கவும்.
4கடுகு, உளுந்து, மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்க்கவும்.