1ஒரு தட்டில் இரண்டு தக்காளி, ஒரு வெங்காயம், வறுத்த இரண்டு வெங்காயம், ஐந்து பல் பூண்டு, இரண்டு துண்டு இஞ்சி, ஆறு காஷ்மீரி சிவப்பு மிளகாய், ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு பட்டை, நான்கு கிராம்பு, இரண்டு ஏலக்காய் மற்றும் ஒரு ஸ்பூன் தனியா ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
2கடாயில் ஒரு ஸ்பூன் நெய் மற்றும் ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
3அரைத்த பேஸ்ட்டை கடாயில் சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை 10 நிமிடங்களுக்கு நடுத்தர தீயில் வதக்கவும்.
4நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வந்ததும், அரை கிலோ சிக்கனை கடாயில் சேர்க்கவும்.
5சிக்கனை மென்மையாக்க கால் கப் தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
6ஒரு ஸ்பூன் கரம் மசாலாவை சேர்த்து, இரண்டு நிமிடங்களுக்கு வதக்கவும்.
7இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து, சிக்கன் வெந்து, சாஃப்ட் ஆகி, திக்கான கிரேவியாக வரும் வரை மூடி போட்டு கொதிக்க விடவும்.
8எண்ணெய் பிரிந்து, கிரேவி சூப்பராக தயாரானதும், கடைசியாக கொத்தமல்லி தூவி பரிமாறவும்.