1நான்கு முந்திரி, இரண்டு கசகசா, மற்றும் கேரட்டை சேர்த்து ஜூஸ் எடுத்து வைக்கவும்.
2ஒரு கேரட்டை நறுக்கி, சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
3ஒரு பெரிய பான் வைத்து, இரண்டு ஸ்பூன் நெய், ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சு இலை சேர்த்து தாளிக்கவும்.
4வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
5வதங்கியதும், இடித்த பச்சை மிளகாய் சேர்த்து, ஒரு கேரட்டை துருவி போட்டு, அரைத்த கேரட் பல்ப்பையும் சேர்த்து, ஒரு ஸ்பூன் தயிர் விட்டு நன்கு கலக்கவும்.
6கார மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு வதக்கு வதக்கவும்.
7நான்கு டம்ளர் அரிசிக்கு, மூன்று டம்ளர் தேங்காய் பால், ஐந்து டம்ளர் கேரட் ஜூஸ் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
8கொதிக்கும் போது கழுவி வைத்த அரிசியை சேர்த்து, தட்டு போட்டு மூடி பத்து நிமிடம் கழித்து திறந்து பார்க்கவும்.
9இப்போது வேகவைத்த கேரட்டை ஒரு பான் வைத்து, சிறிது நெய் விட்டு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, கேரட்டை போட்டு லைட்டாக வதக்கி, ஸ்டவ் ஆஃப் செய்து, லெமன் பிழிந்து, சாதத்தின் மேல் தூவவும்.